Skip to main content

பொதுப் பாதுகாப்பு எச்சரிக்கை - போலி போக்குவரத்து அபராத அறிவிப்புகள்

சிசிடிவி (CCTV) கண்காணிப்பு மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறி, மோசடி செய்பவர்கள் SMS மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் தனிநபர்களை இலக்கு வைத்து ஏமாற்றி வருவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது.

இந்த மோசடி எவ்வாறு செயல்படுகிறது: குற்றவாளிகள் உத்தியோகபூர்வ 'GovPay' தளத்தை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட போலி வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் அபராதம் செலுத்துவதாக நினைத்து, தங்களது வாகன விபரங்கள் மற்றும் வங்கி அட்டை விபரங்களை உள்ளிடுமாறு தூண்டப்படுகிறார்கள். இதன் மூலம் மோசடி செய்பவர்கள் அவர்களின் கணக்குகளிலிருந்து சட்டவிரோதமாகப் பணத்தைப் பெற்றுக் கொள்கின்றனர்.

⚠️ முக்கிய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம்: குறுஞ்செய்திகள் அல்லது செய்திப் பரிமாற்ற செயலிகள் மூலம் வரும் தேவையற்ற, அறிமுகமில்லாத எந்தவொரு லிங்கையும் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும். ரகசிய விபரங்களைப் பாதுகாக்கவும்: உங்களது ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (OTP), பின் (PIN) எண்கள் அல்லது அட்டை பாதுகாப்பு குறியீடுகளை (CVV) யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உத்தியோகபூர்வ நிறுவனங்கள் ஒருபோதும் இந்த விபரங்களைக் கோர மாட்டா. இணைய முகவரியை (URL) சரிபார்க்கவும்: நீங்கள் பயன்படுத்துவது .gov.lk என்ற உத்தியோகபூர்வ அரச இணையத்தள முகவரியைக் கொண்ட பகுதிதானா என்பதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மூலத்தை சரிபார்க்கவும்: சர்வதேச தொலைபேசி எண்களிலிருந்து வரும் உள்நாட்டுப் போக்குவரத்து அபராதங்கள் அல்லது அரசாங்கக் கொடுப்பனவுகள் தொடர்பான எந்தவொரு அறிவிப்புகளையும் புறக்கணிக்கவும்.

உங்களது டிஜிட்டல் சொத்துக்களையும் தனிப்பட்ட விபரங்களையும் பாதுகாப்பது நம் அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும். தகவல்களை அறிந்திடுங்கள். விழிப்புடன் இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்.