Skip to main content

சிசிடிவி (CCTV) கண்காணிப்பு மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறி, மோசடி செய்பவர்கள் SMS மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் தனிநபர்களை இலக்கு வைத்து ஏமாற்றி வருவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது.

இந்த மோசடி எவ்வாறு செயல்படுகிறது: குற்றவாளிகள் உத்தியோகபூர்வ 'GovPay' தளத்தை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட போலி வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் அபராதம் செலுத்துவதாக நினைத்து, தங்களது வாகன விபரங்கள் மற்றும் வங்கி அட்டை விபரங்களை உள்ளிடுமாறு தூண்டப்படுகிறார்கள். இதன் மூலம் மோசடி செய்பவர்கள் அவர்களின் கணக்குகளிலிருந்து சட்டவிரோதமாகப் பணத்தைப் பெற்றுக் கொள்கின்றனர்.

⚠️ முக்கிய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம்: குறுஞ்செய்திகள் அல்லது செய்திப் பரிமாற்ற செயலிகள் மூலம் வரும் தேவையற்ற, அறிமுகமில்லாத எந்தவொரு லிங்கையும் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும். ரகசிய விபரங்களைப் பாதுகாக்கவும்: உங்களது ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (OTP), பின் (PIN) எண்கள் அல்லது அட்டை பாதுகாப்பு குறியீடுகளை (CVV) யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உத்தியோகபூர்வ நிறுவனங்கள் ஒருபோதும் இந்த விபரங்களைக் கோர மாட்டா. இணைய முகவரியை (URL) சரிபார்க்கவும்: நீங்கள் பயன்படுத்துவது .gov.lk என்ற உத்தியோகபூர்வ அரச இணையத்தள முகவரியைக் கொண்ட பகுதிதானா என்பதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மூலத்தை சரிபார்க்கவும்: சர்வதேச தொலைபேசி எண்களிலிருந்து வரும் உள்நாட்டுப் போக்குவரத்து அபராதங்கள் அல்லது அரசாங்கக் கொடுப்பனவுகள் தொடர்பான எந்தவொரு அறிவிப்புகளையும் புறக்கணிக்கவும்.

உங்களது டிஜிட்டல் சொத்துக்களையும் தனிப்பட்ட விபரங்களையும் பாதுகாப்பது நம் அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும். தகவல்களை அறிந்திடுங்கள். விழிப்புடன் இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்.

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் நேரடித் தொலைபேசி இலக்கமான (Hotline) 115226126 என்ற இலக்கத்தை பயன்படுத்தி, +94115226126, +0115226126 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக மற்றும் 0771167739, 0742756098 ஆகிய கையடக்கத் தொலைபேசி இலக்கங்கள் மூலம், திணைக்களத்தின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, தற்போது வரை சில தரப்பினரால் தனிநபர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெற்று நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதாக எங்களுக்கு அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அந்த தரப்பினரால் அரச இலட்சினையை பயன்படுத்தி ஒரு கையடக்கத் தொலைபேசி செயலியை (APP) உருவாக்கி, அதன் மூலம் டிஜிட்டல் அடையாள அட்டை அல்லது இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்காக உங்கள் தகவல்களைப் பதிவு செய்வதாகக் கூறி, திணைக்களத்தின் பெயரைத் தவறாகப் பயன்படுத்துவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் அத்தகைய பதிவுகளை மேற்கொள்வதில்லை என்பதை நாங்கள் உங்களுக்கு வலியுறுத்துவதுடன், மேலும், அத்தகைய கையடக்கத் தொலைபேசிகளிலிருந்து வரும் அழைப்புகளுக்கு உங்கள் தகவல்களை வழங்க வேண்டாம் என்றும் தயவாய் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், எங்கள் நேரடித் தொலைபேசி இலக்கம் போன்ற இலக்கத்தலிருந்து அழைப்பதன் மூலமாகவோ அல்லது https://drpgov-lk.com என்ற திணைக்களத்தின் இணையதளத்தை போன்ற ஒரு போலி இணையதளத்தை பயன்படுத்தி உங்கள் தகவல்கள் கேட்கப்பட்டால், தயவுசெய்து அந்தத் தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் மூலம் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அல்லது டிஜிட்டல் அடையாள அட்டைக்காக தற்போது வரை எந்த பதிவுகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், மோசடி நபர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் பொதுமக்களை தயவாய் கேட்டுக்கொள்கிறோம்.

எச்.எம்.ஜே.எம்.ஹேரத் ஆட்களைப் பதிவு செய்யும் ஆணையாளர் நாயகம்

புதிதாக வெளியிடப்பட்ட SLDDS ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்கள் PDF-ஐ மதிப்பாய்வு செய்து கருத்துக்களை வழங்குமாறு பொதுமக்கள், உருவாக்குநர்கள் மற்றும் அணுகல் ஆதரவாளர்களை நாங்கள் அதிகாரப்பூர்வமாக அழைக்கிறோம். இந்த ஆவணம் டிஜிட்டல் பிராண்டிங், வலை அணுகல் (WCAG 2.2) மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் பொது சேவைகளுக்கான தேசிய தரத்தை நிறுவுகிறது.

  • பொது கருத்து தெரிவிக்கும் காலம்: ஏப்ரல் 21, 2026 முதல் மே 22, 2026 வரை.

  • நோக்கம்: அனைத்து அரசாங்க தளங்களிலும் நிலைத்தன்மை, அணுகல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக நமது டிஜிட்டல் தரங்களைச் செம்மைப்படுத்துதல்.

  • எவ்வாறு பங்கேற்பது: கீழே உள்ள ஆவணத்தை பதிவிறக்கம் செய்து, உங்கள் பரிந்துரைகள் அல்லது தொழில்நுட்ப கருத்துக்களை அனுப்பவும்.

    மின்னஞ்சல்:dir_it@mode.gov.lk

உங்கள் பங்களிப்பு வடிவமைப்பிலேயே அனைவரையும் உள்ளடக்கியதாகவும், அனைத்து இலங்கையர்களுக்கும் அணுகக்கூடியதாகவும் உள்ள ஒரு டிஜிட்டல் சூழலை உருவாக்க எங்களுக்கு உதவும்.