Skip to main content

மெய்நிகர் சொத்து சேவை வழங்குநர்கள் (VASP)

MoT Editor

மெய்நிகர் சொத்து சேவை வழங்குநர்கள் (VASP) தொடர்பான துணைக்குழுவின் 2-வது கூட்டம் இலங்கையின் மெய்நிகர் சொத்து சேவை வழங்குநர்கள் (VASP) ஒழுங்குமுறை கட்டமைப்பிற்கான வரைவு கருத்துரு ஆவணம் குறித்த அவதானிப்புகளை முன்வைக்கவும், அது குறித்து கலந்துரையாடவும் முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைத்த VASP துணைக்குழுவின் 2-வது கூட்டம் அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்நிகழ்வு டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன தலைமையில் நடைபெற்றது. இதில் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, திரு. வருண ஸ்ரீ தனபால மற்றும் இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவின் (FIU) பணிப்பாளர் கலாநிதி சுபானி கீர்த்திரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர். மொத்தம் 28 உறுப்பினர்கள் இதில் தீவிரமாகப் பங்கேற்று, முந்தைய அமர்வில் முன்வைக்கப்பட்ட கருத்துரு ஆவணத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான பெறுமதிமிக்க கருத்துக்களையும் பரிந்துரைகளையும் பகிர்ந்து கொண்டனர். கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, இந்த அமர்வில் முன்வைக்கப்பட்ட முக்கிய அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த ஆவணத்தை உருவாக்குவதற்கு குழு ஒப்புக்கொண்டது.

இதனைத் தொடர்ந்து, ஏனைய நாடுகளில் பின்பற்றப்படும் ஒழுங்குமுறை கட்டமைப்புகளை ஆய்வு செய்து, எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தில் அது குறித்த கண்டுபிடிப்புகளை சமர்ப்பிக்குமாறு பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு (SEC) மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு (MoDE) ஆகியவற்றிற்கு பிரதி அமைச்சர் அழைப்பு விடுத்தார். அத்துடன், ஒரு நடைமுறை மற்றும் பயனுள்ள அமலாக்க அணுகுமுறையை ஆதரிக்கும் வகையில், ஒழுங்குபடுத்துநர் என்ற ரீதியில் SEC எதிர்கொள்ளக்கூடிய சவால்களை அடையாளம் காணுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

சர்வதேச தரத்திற்கு இணங்க இலங்கையின் பணச்சலவை எதிர்ப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதைத் தடுக்கும் (AML/CFT) பொறிமுறையை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, கடந்த பெப்ரவரி 12 ஆம் திகதி மத்திய வங்கியின் பிரதான CFT குழுவிடம் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளின் தொடர்ச்சியாக இக்கூட்டம் அமைந்தது. பொது மற்றும் தனியார் துறைகளின் நிபுணத்துவத்தை உள்ளடக்கிய இந்த உத்தேசக் கட்டமைப்பின் முக்கிய சிறப்பம்சங்கள் பின்வருமாறு: VASP ஒழுங்குமுறை குழுவின் பரிந்துரைகள்.

மெய்நிகர் சொத்துத் துறையில் பணச்சலவை மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் அபாயங்கள் குறித்த தேசிய இடர் மதிப்பீட்டின் கண்டுபிடிப்புகள்.

2026/2027 காலப்பகுதிக்குள் படிப்படியாகச் செயற்படுத்துவதற்கான வரைபடம். பதிவு செய்தல், KYC/AML கடப்பாடுகள் மற்றும் அறிக்கையிடல் தரநிலைகள் உள்ளிட்ட முன்மொழியப்பட்ட இணக்கப்பாட்டு நடவடிக்கைகள்.

image 01image 02image 03image 05image 04image 06